1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (14:52 IST)

இந்தியாவில் முதல்முறையாக கிராமத்தில் நடைபெறும் முதல்வர் பதவியேற்பு விழா!

இந்தியாவில் முதல்முறையாக கிராமத்தில் நடைபெறும் முதல்வர் பதவியேற்பு விழா!
இந்தியாவில் முதல் முறையாக ஒரு கிராமத்தில் முதலமைச்சர் பதவி ஏற்பு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது 
 
அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரான பகவந்த் மான் என்பவர் இன்னும் ஒரு நாளில் முதல்வர் பதவியை ஏற்க உள்ளார். இந்த நிலையில் தங்களது கட்சியின் வெற்றி குறித்து பேட்டியளித்த பகவந்த் மான், முதலமைச்சர் பதவி ஏற்பு விழா ராஜ்பவனில் நடைபெறாது என்றும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் தான் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்றும் கூறியுள்ளார் 
 
இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு முதலமைச்சர் கிராமத்தில் சென்று பதவி ஏற்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.