பிரனாப் முகர்ஜி… ஆழ்ந்த கோமா நிலையில் நீடிப்பு!

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (17:32 IST)
முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி இன்னும் ஆழ்ந்த கோமா நிலையிலேயே நீடிப்பதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான பிரனாப் முகர்ஜி, மூளையில் உள்ள ரத்தக்கட்டியை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்குக் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது. அதையடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்து வெண்ட்டிலேட்டர் உதவியுடனேயே இருந்தார்.

தற்போது வரை அவர் ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அவரது சிறுநீரக செயல்பாடுகள் மேலும் குறைந்துள்ளதாகவும் தொடர் கோமா நிலையிலேயே அவர் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்றைய அப்டேட்டாக பிரனாப் முகர்ஜி இன்றும் ஆழ்ந்த கோமா நிலையிலேயே இருப்பதாக இராணுவ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. பிரனாப் முகர்ஜி 17 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

எல்லாம் காட்டு

ஒரே கல்லில் 4 மாங்கா!.. புதிய அமைச்சரவை மூலம் வரலாற்றை மாற்றிய விஜய்...

தவெக அமைச்சர்கள் பதவியேறு விழா!.. மீண்டும் முதலிடத்தில் வந்தே மாதரம்!..

தவெக பெண்களை இழிவாக பேசியதாக வழக்கு: பொன்ராஜ் முன்ஜாமீன் மனுக்கள் இன்று விசாரணை..!

தவெக ஆட்சி மீது மக்களுக்கு கோபம் வரவழைக்க, வேண்டுமென்றே மின் தடையா? திமுக ஆதரவு அதிகாரிகள் வேலையா?

அமைச்சர்கள், அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது கட்டாயம்: அமைச்சர் அருண்ராஜ்

அடுத்த கட்டுரையில்
Show comments