சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (03:20 IST)

நீண்ட நாட்களாக தேடி வந்த குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக் கொலை

நீண்ட நாட்களாக தேடி வந்த குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக் கொலை

தெலுங்கானா மாநிலம், மெகபூப் நகர் மாவட்டம், சாத்நகர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியருப்பதாக  தேசிய பாதுகாப்பு ஏஜென்சிக்கு தகவல் கிடைத்தது.


 


இதை அடுத்து, அதிகாரிகள் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தியதில், அங்கு பதுங்கியிருந்தது நக்சலைட்டாக இருந்து ரவுடி கும்பல் தலைவனாக மாறிய நயீம் மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது.  அவன் மீது ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

மேலும் இவன் தேடப்படும் குற்றவாளியாக போலீஸாரால் அறிவிக்கப்பட்டு இருந்தான். எனவே, போலீசார் அவர்களை சுற்றிவளைத்தனர். ஆனால் திடீரென அந்த கும்பல் போலீசாரை சுட்டுவிட்டு தப்பியோட முயன்றனர். அதனால் போலீசார் பதில் தாக்குதல் நடத்தி நயீம் மற்றும் அவனது கூட்டாளியை கொன்றனர்.