1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (18:00 IST)

நாட்டின் மிகப்பெரிய மருத்துவமனையை #Amritahospital தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

AMIRTHA HOSPITAL
உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில்   ஒன்றான இந்தியாவில் மிகப்பெரிய  தனியார் மருத்துவமனையை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத்தில், மிகப்பெரிய பன்னோக்கு மருத்துவமனையை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மருத்துவமனைக்கு அமிர்தா மருத்துவமனை என்று பெயரிட்டுள்ளது.

130 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில், 7 மாடியில், 2600  உருவாக்கப்பட்டுள்ளது.  இங்கு, 2600 படுக்கை வசதிகளும், 534 ஐசியுகளும் இடம்பெற்றுள்ளது.

 இந்த மருத்துவமனை,  மாதா  அமிர்தானந்தமயி அவர்களால், 2016 ஆம் ஆண்டு அடிக்கல்  நாட்டப்பட்டு தற்போது பணிகள் முடிந்த நிலையில் நேற்று பிரதமர் மோடி  இந்த பிரமாண்ட மருத்துவமனையை நேற்று தொடங்கி வைத்து, அமிர்தானந்தமயி அவர்களிடம் ஆசிர் பெற்றார்.