வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 28 செப்டம்பர் 2022 (07:50 IST)

பி.எஃப்.ஐ. அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை

PFI
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவை சட்டவிரோத இயக்கமாக அறிவித்து அந்த அமைப்புக்கு 5 ஆண்டு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது 
 
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகளில் மற்றும் அதன் அலுவலகங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தியதை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது