1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (12:37 IST)

கொரோனாவாவது.. மாஸ்க்காவது..! ஆஃபர் அறிவிப்பால் குவிந்த கூட்டம்!

Lulu mall
கேரளாவில் உள்ள லுலு மாலில் நள்ளிரவு ஆஃபர் அறிவிக்கப்பட்டதால் எக்கச்சக்கமான மக்கள் குவிந்த சம்பவம் வைரலாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கேரளாவிலும் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால் மக்கள் மாஸ்க் அணிவது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று கேரளாவில் பிரபலமான லுலு ஷாப்பிங் மாலில் நள்ளிரவு ஆஃபர் அறிவிக்கப்பட்டது. இதனால் ஆஃபரில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டல் லுலு மால் நோக்கி படையெடுத்தது. மாலுக்குள் நிற்கவே இடம் இல்லாத அளவும் புற்றீசல் போல மக்கள் கூட்டம் குவிந்து கிடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கேரளாவில் கொரோனா தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் மக்கள் பலர் கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டமாக குவிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.