வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2016 (17:49 IST)

தமிழர்களை பாதுகாக்க கர்நாடகாவில் துணை ராணுவப்படை குவிப்பு!

தமிழர்களை பாதுகாக்க கர்நாடகாவில் துணை ராணுவப்படை குவிப்பு!

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதில் இருந்து கர்நாடகாவில் தொடர் போராட்டங்களும் வன்முறைகளும் நடைபெற்று வருகிறது.


 
 
தமிழர்களுக்கு எச்சரிக்கையும், தமிழர்கள் மீது தாக்குதலும் நடத்துகின்றனர். இதனால் பெங்களூருவில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க மற்றும் தமிழர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பதற்காக துணை ராணுவப்படை அதிரடியாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளதால் வன்முறை சம்பவம் நடைபெறாமல் பெங்களூருவில் உள்ள தமிழகர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கர்நாடகா டிஜிபி தெரிவித்துள்ளார்.