1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (13:22 IST)

கனமழை எதிரொலி - கேரளாவில் ஓணம் பண்டிகை ரத்து

கேரளாவில் கனமழை பெய்து வருவதனால் இந்த மாதம் 25 ஆம் தேதி நடைபெற இருந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.
கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்து வருவதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரமெங்கும் வெள்ள நீர் புகுந்துள்ளது. 
 
பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்தும், பல வீடுகள் வெள்ளத்திலும் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
 
இந்நிலையில் கனமழை காரணமாக கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழாவான ஓணம் பண்டிகையை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.