1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2023 (12:34 IST)

சோனியா காந்தியை சந்திக்கிறார் முதல்வர் நிதிஷ்குமார்.. காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணியா?

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று டெல்லி சென்று சோனியா காந்தியை சந்திக்க இருப்பதாகவும் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பது குறித்து அவர் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரயிருப்பதை அடுத்து பாஜக கூட்டணிக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக திட்டமிட்டுள்ளனர் 
 
இவ்வாறான ஒரு முயற்சியில் ஈடுபட பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று டெல்லி சென்றுள்ளார். அவர் சோனியா காந்தி உள்பட பல தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒரே கூட்டணியில் வலுவாக தேர்தலில் போட்டியிட அவர் விரும்பும் கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி ராஜா உள்பட பல தேசிய தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டுவதில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்க வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் ஒன்று பட்டால் தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்றும் நிதேஷ்குமார் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran