1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 2 ஜூலை 2021 (16:27 IST)

166 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் உற்சாகம்!

கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் வாரத்தில் இரண்டு நாட்கள் ஏறி மூன்று நாட்கள் இறங்கியும் வருகிறது என்பதையும் இது பார்த்துக் கொண்டிருக்கிறோம் 
 
இந்த நிலையில் இன்று மும்பை பங்குச் சந்தையில் 166 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று பங்குசந்தைகளில் தொடங்கியது முதலே ஏற்றத்தில் இருந்த நிலையில் சற்று முன் முடிவடைந்த வர்த்தகத்தில் சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்ந்தது. இதனை அடுத்து சென்செக்ஸ் என்ற 52484புள்ளியில் வர்த்தகம் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி இன்று 42 புள்ளிகள் உயர்ந்தது என்பதும் 15722என்ற புள்ளியில் வர்த்தகம் நிறைவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. வாரத்தின் கடைசி நாளாக இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதே போல் வரும் திங்கட்கிழமை பங்குச் சந்தை மேலும் உயரும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்