1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 15 நவம்பர் 2019 (18:22 IST)

பழங்குடியினரின் நாட்டுப்புற நடனம் ...சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ

நாம் இப்போது நவ யுகத்தில் வாழ்ந்தாலும், இந்தியாவின் பண்டைய காலத்தை  நம்மால் மறந்துவிட முடியாது. இன்றும் கூட மலை வாசஸ்தலங்களில் பழங்குடியினர் தம் மரபுகளுடன் வாழ்ந்து வருகின்றனர். நாட்டுக்கும் பெருமை சேர்க்கின்றனர்.
இந்நிலையில், ஷெஃபாலி வைத்தியா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். 
 
அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
இந்த வீடியோவை நான் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பைகா திரிபார்ல் என்ற கிராமத்தில் பதிவுசெய்தேன். இதுஒரு பழங்கால கிராமத்து பாட்டு ஒரு சிறுவன் பாடிக்கொண்டிருக்கிறான் . அதன் பொருள்  கடவுள் ஸ்ரீராம் காட்டினுள் இருக்கிறார் என்பதாகும். மேலும் பெருவாரிய இடது சாரிகள் பழங்குடியினர் இந்துக்கள் அல்ல என்று கூறுகின்றானர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.