வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 3 ஆகஸ்ட் 2022 (10:47 IST)

குரங்கு அம்மை Do’s and Don'ts: வழிக்காட்டுதலை வெளியிட்ட மத்திய அரசு!

குரங்கம்மை நோயை தடுக்க செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை குறித்து வழிக்காட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


குரங்கு அம்மை என்பது வைரஸால் ஏற்படும் ஒரு ஜூனோடிக் நோயாகும். இந்த நோய் மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் மட்டுமே உள்ளது. ஆனால் சமீபத்தில், உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, தொற்று இல்லாத நாடுகளிலிருந்தும் வழக்குகள் பதிவாகியுள்ளன.

குரங்கு அம்மை பொதுவாக காய்ச்சல், சொறி மற்றும் வீங்கிய நிணநீர் முனைகளுடன் வெளிப்படுகிறது மற்றும் பல மருத்துவ சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இது பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும் அறிகுறிகளுடன் சுய கட்டுப்படுத்தும் நோயாகும்.

இந்நிலையில் இந்தியாவில் இதுவரை எட்டு பேர் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டுள்ளனர். ஆம், டெல்லியில் இன்று ஒரு குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது. இது இதுவரை தேசிய தலைநகரில் வைரஸ் நோயின் மூன்றாவது வழக்காகும்.

இதுவரை இந்தியாவில் எட்டு நோய் வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன, அவர்களில் ஐந்து பேர் வெளிநாட்டு பயண வரலாற்றைக் கொண்டுள்ளனர் என்று தெரிவிக்க்ப்பட்டுள்ளது. இதனைத்தொடந்து குரங்கம்மை நோயை தடுக்க செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை குறித்து வழிக்காட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு…

குரங்கு அம்மை நோயை தடுக்க செய்ய வேண்டியவை:

1. குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளியை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும்.

2. சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது சானிடைசர் உபயோகித்து கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ளுதல்

3. குரங்கு அம்மை நோய் பாதித்த நோயாளிகளின் அருகில் இருக்கும் போது, முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து கொள்ளுதல்.

4. சுற்றுச்சூழல் சுகாதாரத்திற்காக கிருமிநாசினியைப் பயன்படுத்திக் கொள்ளுதல்.

குரங்கு அம்மை நோய்: செய்ய கூடியவை:

1. குரங்கு அம்மை நோயாளிகள் பயன்படுத்திய துணிகள், படுக்கைகள், துண்டுகளை பிறர் பகிர்ந்து கொள்ள கூடாது.

2. குரங்கு அம்மை நோயாளிகளின் துணிகளை துவைக்க வேண்டாம்.

3. குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டால் பொது நிகழ்வுகளில் பங்கேற்பதை நிறுத்த வேண்டும்.

4. குரங்கு அம்மை நோய் குறித்த தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.