தொடர்புடைய செய்திகள்
- என்னையா ஆன்டின்னு கூப்பிடுறிங்க....! அனுஷ்காவின் அதிரடி முடிவு ?
- மத்திய அமைச்சர் மீதான பாலியல் புகாரை விசாரிக்க வேண்டு : மேனகா காந்தி கோரிக்கை
- இரும்புத்திரை' இயக்குனரின் தாய் சஸ்பெண்ட்: தமிழக அரசு அதிரடி
- ஜெயலலிதாவை மிரட்டியவருக்கு நாங்கள் எம்மாத்திரம்? அமைச்சர் புலம்பல்
- இந்தாண்டு இறுதிக்குள் 3000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை -பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் வீடுகளில் ரெய்டு...ஆம் ஆத்மி கட்சிக்கு வந்த சோதனை...
தலைநகர் டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
சென்ற வருடத்தில் பல பிரச்சனைகளை சந்தித்த கெஜ்ரிவால் எதற்கும் அசராமல் தன் ஆட்சியில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இந்நிலையில் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சரின் வீடுகள் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் போன்ற 16 மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளனர்.
இதில் குறிப்பாக போக்குவரத்து, சட்டம் வருவாய் துறை அமைச்சராக இருப்பவரான கைலாஷ் கெலாட் மீது வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து டில்லி, ஹர்யானா போன்ற நகரங்களில் அவர்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துரையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதில் சில முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
இது பற்றி அரவிந் கெஜ்ரிவால் கூறும்போது: இது நரேந்திரமோடி தலைமையிலான பிஜேபி ஆட்சியின் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியுள்ளார்.
