1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 மே 2022 (11:20 IST)

பள்ளி மாணவர்களுக்காக ரூ.3 லட்சம் கோடி: மத்திய அமைச்சர் தகவல்!

Dharmendhra
பள்ளி மாணவர்களுக்காக 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்
 
மத்திய மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுக்காக பல கோடிகளுக்கு வருகிறது என்பதும் குறிப்பாக பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க அடுத்த 5 ஆண்டுகளில் 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தார் 
 
மேலும் சமக்ர சிக்‌ஷா பிரிவின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது