1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (15:07 IST)

முக்கிய கட்சியின் வேட்பாளர் திடீர் மரணம்.. பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் ஒத்திவைப்பு..!

election
பிப்ரவரி 27ஆம் தேதி மேகாலயா மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் முக்கிய கட்சியின் வேட்பாளர் ஒருவர் இறந்துவிட்டதால் ஒரு தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
மேகாலயா மாநிலத்தில் மொத்தம் 60 தொகுதிகளில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சோஹியோங் என்ற தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட லிங்க்டோ என்பவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். 
 
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த போது அவர் திடீரென மறைந்ததால் அந்த தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக மேகாலயா தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 
 
மீதமுள்ள 59 தொகுதிகளுக்கும் திட்டமிட்டபடி பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் தொகுதி தேர்தல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்பட்டோம் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran