1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 28 ஏப்ரல் 2021 (17:23 IST)

40 வயது காரருக்காக படுக்கையை விட்டுக்கொடுத்த 85 வயது முதியவர் மரணம்!

கொரோனா காரணமாக படுக்கை வசதி இல்லாமல் இருந்த நிலையில் 40 வயது இளைஞர் ஒருவருக்கு தனது படுக்கையை விட்டுக்கொடுத்தார் நாராயணன் தபோல்கர்.

நாக்பூரில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் நாராயணன் தபோல்கர். இவருக்கு வயது 85 ஆன நிலையால் செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன. அதே மருத்துவமனையில் பெண்மணி ஒருவர் தனது 40 வயது கணவனுக்காக படுக்கை இல்லாமல் தவித்த போது தனது படுக்கையை அந்த நபருக்காக தபோல்கர் காலி செய்துவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் இப்போது அவர் உயிரிழந்துள்ளார்.