1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 23 நவம்பர் 2020 (10:43 IST)

தந்தையின் வேலை தனக்கு கிடைக்க மகன் செய்த செயல் – இப்போது சிறையில்!

ஜார்க்கண்ட்டில் தனது தந்தையின் அரசு வேலையை தான் வாங்கிக்கொள்ள அவரை கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார் மகன்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டம் பர்ககனா பகுதியை சேர்ந்த கிருஷ்ணா ராம் என்பவர். இவர் நிலக்கரி சுரங்கத்தில் காவலராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இவரது மூத்த மகன் எப்ப்டியாவது தந்தையின் வேலையை தான் வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

இதையடுத்து அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தார். ஆனால் இது சம்மந்தமாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்த போது கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரைக் கைது செய்த போலிஸார் சிறையில் அடைத்துள்ளனர்.