1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (23:29 IST)

விவாகரத்து கிடைத்ததற்காக 50 கிலோ ஸ்வீட் வாங்கிய கொண்டாடிய வாலிபர்

திருமணம் நடந்ததற்காக பார்ட்டி வைத்த இளைஞர்களைத்தான் இதுவரை பார்த்துள்ளோம்,. ஆனால் முதல்முறையாக குஜராத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் விவாகரத்து கிடைத்ததற்காக ஸ்வீட் வாங்கி நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து கொண்டாடியுள்ளார்



 


குஜராத்தைச் சேர்ந்த 26 வயது ரிங்கிஷ் ராச் என்பவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான முதல் நாளில் இருந்தே மனைவியுடன் சண்டை சச்சரவு. இதனால் ஒரே வருடத்தில் விவாகரத்து , தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார்.

கிட்டத்தட்ட இரண்டு வருட சட்டப்போராட்டத்திற்கு பின்னர் இன்று அவருக்கு விவாகரத்து என்ற விடுதலை கிடைத்தது. ஒருவருடம் நரக வாழ்க்கை வாழ்ந்ததாகவும் அதில் இருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிட்டதாகவும் கூறி 50 கிலோ காஜூ பர்பி வாங்கி நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தாராம். மேலும் அவர் வழங்கிய இனிப்பு பையில் 'சுட்டாச்சேடா ஹாராக் நா' (விவாகரத்து கொண்டாட்டம்) என்னும் வாக்கியத்துடன் அனைவருக்கும் கொடுத்துள்ளார்.