தொடர்புடைய செய்திகள்
- ஜப்பான் சென்ற பிரதமர் மோடி.. மோடிக்காக அமெரிக்க பயணத்தை ரத்து செய்த ஜப்பான் வர்த்தக அமைச்சர்..!
- 75 வயதானால் ஓய்வு பெற வேண்டும் என ஒருபோதும் சொல்லவில்லை: மோகன் பகவத் மறுப்பு
- போலி வாக்காளர்கள் மட்டுமல்ல.. போலி வேட்பாளர்கள்: தமிழ்நாட்டில் இருந்து இறக்குமதியா?
- நெல்லை வருகிறார் பிரியங்கா காந்தி.. செல்வப்பெருந்தகை அறிவிப்பு.. என்ன காரணம்?
- இன்று விநாயகர் சதூர்த்தி.. பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து..!
பிரதமர் தாயாரை அவதூறாக பேசிய நபர் கைது.. ராகுல் காந்தி கண்டனம்..!
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக பீகாரின் முகமது ரிஸ்வி என்ற நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில், பீகாரில் ராகுல் காந்தியின் யாத்திரையின் போது, காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் மேடையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியையும் அவரது மறைந்த தாயாரையும் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பாட்னாவில் உள்ள கோத்வாலி காவல் நிலையத்தில் பாஜகவினர் இது தொடர்பாக புகார் செய்து, ராகுல் காந்தி இந்த விவகாரத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாஜக மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான ரவிசங்கர் பிரசாத், ராகுல் காந்தி மற்றும் ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை எக்ஸ் தளத்தில் வன்மையாக கண்டித்துள்ளார். ராகுல் காந்தி தனது கண்டனத்தில் பிரதமருக்கு மட்டுமின்றி, இந்திய கலாச்சாரம் மற்றும் விழுமியங்களுக்கும் இது ஒரு "வெட்கக்கேடான" மற்றும் "ஆழமான அவமானம்" என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Edited by Mahendran
