வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : வியாழன், 9 ஜனவரி 2020 (13:31 IST)

நான் சிங்கிளாகத்தான் போராடுவேன்; கீழ்த்தரமான காங்கிரஸுடன் சேரமாட்டேன்; முதல்வர் கறார்

கீழ்த்தரமான அரசியல் செய்யும் காங்கிரஸ் மற்றும் இடது சாரிகளுடன் சேர்ந்து போராடாமால் தனியாகவே போராடுவேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

வருகிற ஜனவரி 13 ஆம் தேதி எதிர்கட்சிகள் டில்லியில் ஒன்று கூடி குடியுரிமை திருத்த சட்டத்திற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எதிராக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொள்ள மறுத்துள்ளார். இது குறித்து அவர், “குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக நான் தனியாக போராடுவேன். கீழ்த்தரமான அரசியல் விளையாட்டை நடத்தி வரும் காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சிகளுடன் கைகோர்க்க மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.