1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 25 ஏப்ரல் 2018 (18:46 IST)

மம்தா பானர்ஜி ஒரு சூர்ப்பனகை: பாஜக பிரமுகர் சர்ச்சை பேச்சு

தமிழக அளவிலும் சரி, தேசிய அளவிலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவதை பாஜகவினர் பார்ட் டைம் தொழிலாக பார்த்து கொண்டிருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அவர்களது கிண்டல் உண்மையாகும் வகையில் தான் பாஜகவினர்களும் பேசி வருகின்றனர்.
 
இந்த நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சூர்ப்பனகை என்று பாஜக தலைவர் ஒருவர் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்,.
 
உத்தரபிரதேச மாநில எம்.எல்.ஏ சுரேந்திரசிங் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய போது, 'மம்தா பானர்ஜி ஒரு சூர்ப்பனகை என்று கூறிவிட்டு பின்னர் மேற்குவங்க மாநிலத்தில் தொடர்ச்சியாக இந்துக்கள் கொல்லப்பட்டு வருவதாகவும் அதனை முதலமைச்சர் என்ற முறையில் தடுக்க வேண்டிய மம்தா பானர்ஜி எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் அவரை சூர்ப்பனகை என்று விமர்சித்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார். 
 
எம்.எல்.ஏ சுரேந்திரசிங்கின் இந்த பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.