1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : சனி, 26 அக்டோபர் 2019 (15:34 IST)

காதலித்து ஏமாற்றிய இளைஞர் : ஆசிட் வீசிய இளம்பெண்!

கடந்த  6 மாதமாக காதலித்து விட்டு விலகிச் சென்ற இளைஞர் மீது இளம்பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம்  அலிகார் மாவட்டத்தில் உள்ள ஜீவன்கார் என்ற இடத்தில் வசித்து வருபவர் பைசாத். இஅவர் அப்பகுதியில் வசித்து வந்த ஒரு இளம்பெண்ணை கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.
 
ஆனால், கடந்த சில நாட்களாக அப்பெண்ணுடன் பேசமல் தவிர்த்து வந்துள்ளார். அப்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ள கூறியபோது இளைஞர்  மறுத்துள்ளதாகத் தெரிகிறது.
அதனால் கோபம் அடைந்த இளம்பெண், இளைஞர் மீது ஆசிட் வீசியுள்ளார். ஆசிட் வீட்டில் பைசாத்தின் கண்கள் மற்றும் முகம் பாதிக்கபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதுகுறித்து  பைசாத்தின் தாயார் , அப்பெண் மீது போலீஸுல்  புகார் தெரிவித்துள்ளார். தற்போது,அப்பெண்ணைக் கைது செய்துள்ள போலீஸார் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.