1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 26 ஜூன் 2021 (22:12 IST)

மட்டன் இல்லாததால்… மணமகன் செய்த விபரீதம் செயல் !

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் குழம்பில் மட்டன் இல்லாததால் திருமணம் நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம்  ஜெய்ப்பூர் அருகே உள்ள ஒரு பகுதியில் திருமணம் நடைபெற்றது. மணமகன் வீட்டார் மணமகளின் வீட்டிற்கு ஊர்வலமாக வந்தனர்.

அப்போது,மணமகன் வீட்டாருக்கு , மணப்பெண் வீட்டார் விருந்து வைத்துள்ளனர். அந்த விருந்தில் மட்டன் இல்லை எனத் தெரிகிறது. மட்டன் இருக்குமென்று எதிர்ப்பார்த்த மணமகன் வீட்டார் அதில்லாததைக் கண்டு வருத்தம் அடைந்து  மணப்பெண் வீட்டாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

பின்னர் மணமகள் வீட்டார் மணமகன் வீட்டாரிடம் சமரசம் செய்ய முயன்றுள்ளனர்.  ஆனால் இதைக்கேட்டாமல் மணமகன் வீட்டார் வேறொரு இடத்திற்குச் சென்று அங்கு வேறொரு பெண்ணை மண முடித்துக்கொண்டு சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர்.

குழம்பில் மட்டன் இல்லை என்பதற்காக மணப்பெண்ணையே வேண்டாமெனக் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.