1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 4 ஜூலை 2022 (16:55 IST)

கர்நாடகா ஏடிஜிபி கைது: சிஐடி அதிரடியால் காவல்துறையில் பரபரப்பு!

arrested
காவல் துறையின் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றான ஏடிஜிபி ஒருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு செய்ததாக அம்மாநில ஏடிஜிபி அம்ரித் பால் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது
 
இதுகுறித்து விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது கர்நாடக மாநில ஏடிஜிபி பிரித்து அம்ரித் பால் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்
 
இந்த வழக்கின்விசாரணையின் போது அம்ரித் பாலுக்கு எதிராக ஆதாரங்கள் சிக்கியதாகவும் இதனை அடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
ஒரு மாநிலத்தின் ஏடிஜிபி கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது