1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 மார்ச் 2022 (11:24 IST)

ஹிஜாப் தடை தீர்ப்பு; நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்! – இருவர் கைது!

கர்நாடகாவில் கல்லூரியில் ஹிஜாப் அணிய தடை விதித்ததை அனுமதித்து உத்தரவிட்ட நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் உடுப்பி கல்லூரியில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வர அரசு தடை விதித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பல போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும் என தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் பல போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்த கர்நாடக காவல்துறை கொலை மிரட்டல் விடுத்த இருவரை கைது செய்துள்ளனர்.