1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 3 டிசம்பர் 2021 (14:46 IST)

வெளிநாடே செல்லாதவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: கர்நாடக அரசு அதிர்ச்சி தகவல்!

வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்து 5 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வெளிநாடு செல்லாத ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கர்நாடக மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட இரண்டு நபர்களில் ஒருவர் வெளிநாடு சென்றதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது
 
மேலும் அவருடன் தொடர்பில் இருந்த மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
வெளிநாடு செல்லாத ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் எப்படி பரவியது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது