தொடர்புடைய செய்திகள்
- சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..! மக்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் நிறைவேற்றட்டும் என பதிவு..!!
- இந்தியா கூட்டணிக்கு செல்கிறதா தெலுங்கு தேசம்? சந்திரபாபு நாயுடுவிடம் கார்கே பேச்சு..!
- ஆந்திராவில் நடிகை ரோஜா பின்னடைவு.. ஆட்சியை இழக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி..!
- ஆந்திராவில் நடைபெறும் வன்முறைக்கு பாஜக - சந்திரபாபு நாயுடு தான் காரணம்.. ரோஜா எம்.எல்.ஏ
- ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி தோல்வியடையும்..! பிரஷாந்த் கிஷோர் கணிப்பு..!!
ஜெகன் மோகன் ரெட்டி ராஜினாமா.. ஆந்திர முதல்வராகிறார் சந்திரபாபு நாயுடு..!
ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்ற நிலையில் சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஆந்திர சட்டசபை தேர்தலில் முடிவின்படி தெலுங்கு தேசம் கட்சி 133 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும் பாஜக எட்டு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இந்த மூன்று கட்சிகளும் கூட்டணியாக போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 13 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ள நிலையில் இன்னும் சில நிமிடங்களில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்க உள்ள நிலையில் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படும். இன்னும் ஒரு சில நாட்களில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்றுக் கொள்வார் என்றும் அப்போது அகில இந்திய அளவில் உள்ள முக்கிய தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
