வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 9 ஜனவரி 2020 (18:20 IST)

குடியரசு தினத்தை சீர்குலைக்க திட்டம்; 3 பேர் கைது

குடியரசு தினத்தை சீர்குலைக்கும் வகையில் ஐ எஸ் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் சந்தேகப்படும்படியான 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஐ எஸ் பயங்கரவாதிகள் குடியரசு தின விழாவை சீர்குலைக்க இந்தியாவில் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்த நிலையில் டெல்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று டெல்லியில் சிறப்பு போலீஸார் சோதனையில் ஈடுபட்டபோது,  ஐ எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.