தொடர்புடைய செய்திகள்
- 3 நாட்களாக முடங்கியிருந்த பாஸ்போர்ட் இணையதள சேவை.. இப்போதைய நிலை என்ன?
- நம் மாநிலத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை.. அசாம் முதல்வர் அதிரடி..!
- மாமனார், மாமியார் இருந்தால் 2 நாட்கள் விடுமுறை!? அசாம் அரசு புதிய அறிவிப்பு!
- அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல்..! விரைந்து இழப்பீடு வழங்க வலியுறுத்தல்..!!
- 400 சீட்களை வென்றால் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் பாபா கோவில்: அசாம் முதலமைச்சர்..!
இன்று அரசு தேர்வு: இணைய சேவையை கட் செய்த மாநில அரசு..!
அசாம் மாநிலத்தில் இன்று அரசு தேர்வு நடைபெறுவதை அடுத்து இணையதளம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
அரசு பணிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று அசாம் மாநிலத்தில் நடைபெற உள்ள நிலையில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாநிலம் முழுவதும் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும் விதமாக மாநிலம் முழுவதும் செல்போன் தொடர்புடைய அனைத்து இணையதள சேவைகள் துண்டிக்கப்படுவதாக அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உள்துறை தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அசாம் மாநிலத்தில் இன்று அரசு பணிகளுக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்கும் வகையில் செல்போன் தொடர்புடைய அனைத்து இணையதள சேவைகளும் நிறுத்தப்படும்.
இந்த கட்டுப்பாடு மொபைல் போன் சேவைகளுக்கு மட்டுமே. அதே வேளையில் தொலைபேசி இணைப்புகள் அடிப்படையில் குரல் அழைப்புகள் மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகள் ஆகியவை வழக்கம் போல் செயல்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva
