வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 21 ஏப்ரல் 2018 (12:41 IST)

பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்: சிகிச்சை பலனின்றி இந்திய வீரர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் காயமடைந்த இந்திய ராணுவ வீரர் சரண்ஜீத் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் கடந்த 17ம் தேதி பாகிஸ்தான் படையினர் அத்துமீறி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். அந்த துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் சரண்ஜித் சிங் படுகாயம் அடைந்தார்.
 
பின்னர் காயமடைந்த அவரை ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
 
இந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தான் படையினர் 650 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் 31 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.