1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2023 (11:47 IST)

அடுத்த 5 நாட்களில் இந்தியாவில் வெப்ப அலை தாக்கும்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த ஐந்து நாட்களில் இந்தியாவில் வெப்ப அலை தாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடும் வெப்பம் நிலவி வருகிறது என்பதும், இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் பதிவாகி வருவதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை தாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் இரண்டு டிகிரி செல்சியஸ் முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
எனவே மதியம் 12 மணி முதல் மூன்று மணி வரை அவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியே செல்லவும் என்றும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. 
 
மேலும் வெப்பத்தின் தாக்கத்தை தாக்கத்தை கட்டுப்படுத்த அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் நீர்ச்சத்து உள்ள உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran