1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 18 மார்ச் 2021 (23:47 IST)

இந்தியா மோசமான காலத்தை தாண்டிவிட்டது - ரிசர்வ் வங்ககி கவர்னர்

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னன் சக்திகாந்த தாஸ்  இன்று டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், இந்திய பொருளாதாரத்தில் மோசமாக காலகட்டம் முடிந்துவிட்டது என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட சிக்கல்கள் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது போல் தோன்றுகிறது.

மத்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரம் மீண்டு வருகிறது. கடந்தாண்டு பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பிலிருந்து ம்மீள அரசின் தாராள மூலதள செலவுகள் காரணமாக இருந்தது.மேலும் தற்போதைய பாதிப்புகள் விரையில் கட்டுப்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.