1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (15:06 IST)

'பூஸ்டர் டோஸ் தடுப்பூசி 'பற்றி மத்திய அரசு முக்கிய தகவல்

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியைக் கலந்து செலுத்தக் கூடாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக  நாடுகளுக்குப் பரவிய கொரொனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரொனா 3 வது அலை விரைவில் பரவ வாய்ப்புள்ளதாக  நிபுணர்குழு அறிவித்துள்ள நிலையில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி குறித்து மத்திய அரசு ஒரு தகவல் வெளியிட்டுள்ளது. அதில்,  பூஸ்டர் தடுப்பூசியை கலந்து செலுத்தக் கூடாது எனத் தெரிவித்துள்ளது.