வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 24 ஜூலை 2020 (22:36 IST)

கார்கில் போரில்….ஆப்ரேஷன் விஜய் பற்றிய முக்கிய தகவல் !

கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலும் மறக்கவே முடியாத ஒரு போர் நடைபெற்றது. இப்போர் கார்கில் போர் ஆகும்.

இந்தியாவில் பிரிவினை ஏற்பட்ட பிறகு  அண்டை நாடாக பாகிஸ்தான் உதயமானது. அதன் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தாம்னுக்கும் கருத்துவேறுபாடுகள் அதிகரித்திக் கொண்டே வந்தது கஷ்மீர் யாருக்கும் சொந்தம் என்பது அது முற்றியது, ஆனால் சர்தார் வல்லபாய் படேலின் முயற்சியால் காஷ்மீர் மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் காஷ்மீரை இணைதார்.

அதன் பின்னர் கடந்த 1999 ஆம் ஆண்டு காஷ்மீரை ஒட்டியுள்ள கார்கில் என்ற பகுதியை யார் கைப்பது என்ற இந்தியா கைப்பற்றியதில் முனைப்பாகக் கொண்டு பாகிஸ்தானை  வீழ்த்தி வெற்றி கொண்டது.

1999 ஆம் ஆண்டு மே 3ஆம் நாளில் தொடங்கிய இப்போர் ஜூலை 26 ஆம் தேதிவரை நீண்டது. இந்தப் போரில்  பல நூறு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தப் போரை நினைவுகூரும் விதமாக ஜூலை மாதம் 26 ஆம் தேதி கார்கில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த  வரலாற்றுச் சிறப்புமிக்கப் போரில் பாகிஸ்தான் ராணுவத்தின் சதியை முறியடிக்க ’’ஆப்பரேசன் விஜய் ‘’ என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. இதில் இந்திய ராணுவம் வான்வழித்தாக்குதல் நடத்தியது.

இதில் தோல்வி உறுதி என்பதை அறிந்த பாகிஸ்தான் அமெரிக்காவின் உதவியை நாடியது. ஆனால் இந்தப் போரிற்கு காரணமான பாகிஸ்தனை அன்றைய அமெரிக்க அதிபர் கிளிண்டர் கண்டித்தார் அதனால் பாகிஸ்தான் பின் வாங்கியது. இந்திய ராணுவத்தின் தரை வழி, வான்வெளி தாக்குதல்களை பாகிஸ்தன் தோல்வியை தழுவியது.
இந்தியா நமது தேசிய கொடியை பறக்கவிட்டது.