1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (13:33 IST)

சபாநாயகரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் I.N.D.I.A எம்.பிக்கள்.. என்ன காரணம்?

om birla
பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுவதை அடுத்து அனைத்துக் கட்சி எம்பிக்களுக்கும் சபாநாயகர் தேநீர் விருந்து வைக்க உள்ளார். 
 
ஆனால் இந்த தேநீர் விருந்தை I.N.D.I.A கூட்டணியின் எம்பிக்கள் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து கண்டித்து சபாநாயகர் ஓம் பிர்லா வைக்கவுள்ள தேநீர் விருந்தில் I.N.D.I.A கூட்டணி கட்சி எம்பிக்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
 
மேலும் 23 கட்சிகளை சேர்ந்த 142 மக்களவை எம்பிகள் சபாநாயகரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva