வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 17 மே 2021 (16:27 IST)

தினமும் கோமியம் குடிக்கிறேன்...அதனால் கொரொனா இல்லை -பாஜக எம்பி., சர்ச்சை

உலகில் கொரொனா இரண்டாம் கட்ட அலைபரவிவரும் நிலையில் இந்தியாவில் இது கோர தாண்டவம் ஆடிவருகிறது.  எனவே மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரம் மக்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாஜகவின் போபால் தொகுதி  எம்பி., பிரக்யா சிங், நான் தினமும் கோமியம் ( பசுவின்  சிறுநீர்) குடிக்கிறேன் அதனால் எனக்குக் கொரொனா தொற்றில்லை என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

சமீபத்தில் ஐ.எம்.ஏ தலைவர்  ஜெயலால், பசுவின் சிறுநீர் மற்றும் சாணத்தால் கொரொனா தொற்று அழியாது என உறுதிபட தெரிவித்தார். இதை அருந்துவதால் பல தொற்றுகள் ஏற்படும்  என எச்சரித்தார்.

இந்நிலையில், இன்று பாஜகவின் போபால் தொகுதி  எம்பி., பிரக்யா சிங், நான் தினமும் கோமியம் ( பசுவின்  சிறுநீர்)குடிக்கிறேன் அதனால் எனக்குக் கொரொனா தொற்றில்லை என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.