1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 22 ஏப்ரல் 2023 (18:22 IST)

என் உயிரைக் கொடுக்க தயார்...நாட்டை பிரிக்க விட மாட்டேன்- முதல்வர் மம்தா பானர்ஜி

எனது  உயிரைக் கொடுக்க தயாராக இருக்கிறேன் ஆனால் இந்திய நாட்டை பிரிக்கவிட மாட்டேன் என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
 

மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் கட்சி  ஆட்சி நடைபெற்று வருகிறது.

இம்மாநிலத்தின் கொல்கத்தா நகரில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மம்த பானர்ஜி, உங்கள் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகள்.  இந்த ரம்ஜான் பண்டிகையை ஒவ்வொருவரும் கொண்டாட வேண்டும்.  உங்களுக்கு  யாரும் தீங்கு செய்ய முடியாது.  நாம் ஒன்றாக  போராடி வெற்றிபெறுவோம், நாட்டைக் கட்டி எழுப்புவோம் என்று கூறினார்.

மேலும், ‘’நாட்டில் சிலர் பிரிவினையை  உண்டாக்க முயற்சிக்கின்றனர். ஆனால், வங்காளத்தில் அமைதி தொடர வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களுக்கு மோதல்கள் தேவையில்லை …அமைதியே வேண்டும்.   நாட்டில் பிரிவினை ஏற்படுத்துபவர்களுக்கு இந்த ரம்ஜான் நாளில் நான் கூறுகிறேன்… என் வாழ்க்கையைத் தரத் தயாராக இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.