1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 23 மே 2022 (10:23 IST)

டெல்லி மோசமான வானிலை - 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!

மோசமான வானிலை டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. 

 
இன்று அதிகாலை பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் டெல்லியின் பல பகுதிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. மழையின் காரணமாக காலை 5:40 மணி முதல் 7 மணி வரை, நகரின் வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ் குறைந்துள்ளது.  
 
மோசமான வானிலை டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆம், டெல்லியில் சூறைக்காற்று மற்றும் மழை காரணமாக 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 
 
விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய பல்வேறு விமானங்கள் ஜெய்ப்பூர் மற்றும் அண்டை மாநில விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. பல விமானங்கள் வந்து சேராததால் விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன் பயணிகளின் விமான நிலையை சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு பார்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளன. 
 
மேலும் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் மணிக்கு 60 - 90 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.