1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 1 ஜூன் 2021 (13:13 IST)

தடுப்பூசியை கொஞ்சமா போட்டா தட்டுப்பாடு வராது! – டெல்லிக்கு அறிவுரை சொன்ன ஹரியானா முதல்வர்!

டெல்லியில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் கொஞ்சமாக பயன்படுத்தலாம் என ஹரியானா முதல்வர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் உடனடியாக தடுப்பூசி வழங்க மத்திய அரசை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் “டெல்லி அரசு நாள்தோறும் 2 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை செலுத்தியதாலேயே தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் ஹரியானாவில் ஒரு நாளைக்கு 50 முதல் 60 ஆயிரம் தடுப்பூசிகளே செலுத்தி வருகிறோம். அதனால் எங்களுக்கு தடுப்பூசி கையிறுப்பு உள்ளது” என தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்துவதை மாநிலங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஹரியானா முதல்வர் இவ்வாறு கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.