1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 19 ஜனவரி 2023 (14:42 IST)

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு....டெல்லியில் 2 வது நாளாக போராட்டம்

delhi
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்வதாக தேசிய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக வீரர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்திய மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகட் மற்றும் ஆக்ஷி மாலிக் ஆகியோர் பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஜன் சரண் சிங் மற்றும் பயிற்சியாளர்கள் அமைப்பு நிர்வாகிகள் பாலியல் தொல்லை செய்வதாக புகார் தெரிவித்து, நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று  இன்று, டெல்லி ஜந்தர் மனந்தரில்  2 வது நாளாக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் தன் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.