1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 6 டிசம்பர் 2021 (12:53 IST)

தனிக் கட்சி தொடங்குகிறாரா குலாம் நபி ஆசாத்? காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் தலைமை விமர்சனங்களுக்கு காது கொடுப்பதில்லை எனக் கூறியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி உறுப்பினர் பொறுப்பில் இருந்து சமீபத்தில் குலாம் நபி ஆசாத் விலகியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான தலைமை வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி வந்தார். சமீபத்தில் அவரின் பதவிகாலம் முடிந்த நிலையில் மீண்டும் அவருக்கு எம் பி பதவி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்துள்ள அவர்  தனிக்கட்சி தொடங்க போகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆசாத் ‘இப்போதைக்கு தனிக்கட்சி தொடங்கும் திட்டம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அரசியல் சொல்லமுடியாது’ எனக் கூறியுள்ளார்.