ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 30 நவம்பர் 2025 (10:25 IST)

யாருடைய உதவியும் இல்லாமல் ரோபோ டீச்சரை உருவாக்கிய அரசு பள்ளி மாணவர்.. ஆச்சரிய தகவல்..!

யாருடைய உதவியும் இல்லாமல் ரோபோ டீச்சரை உருவாக்கிய அரசு பள்ளி மாணவர்.. ஆச்சரிய தகவல்..!
உத்தரப்பிரதேசத்தின் புலந்தசஹரில் உள்ள அரசுப்பள்ளி மாணவன் ஆதித்யா முறையான பயிற்சி எதுவுமின்றி, முழுமையாக செயல்படக்கூடிய ரோபோ ஆசிரியை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். .
 
ஆதித்யா வகுப்புகள் முடிந்த பின் தனித்து தங்கி, தான் சுயமாக கற்றுக்கொண்ட திறன்கள் மூலம் உதிரி பாகங்களை கொண்டு சோபியா என்ற ரோபோ டீச்சரை உருவாக்கினார். அவரது தந்தை மாதம் ₹15,000 மட்டுமே சம்பாதிப்பதால், ரோபோவுக்கான செலவுக்கு நண்பர்களிடம் கடன் வாங்க வேண்டியிருந்தது.
 
"ஆசிரியர்கள் வராதபோது மாணவர்கள் பாடத்தை இழப்பதை தடுக்க விரும்பினேன்" என்ற எளிய யோசனையிலிருந்து சோபியாவை உருவாக்கியதாக ஆதித்யா கூறுகிறார். சோபியா இந்தியாவின் இரண்டாவது ரோபோடிக் கற்பித்தல் உதவியாளர் என்று அவர் நம்புகிறார். பெரிய கனவுகளுடன் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தாக்க ஆய்வகங்களை அமைக்க வேண்டும் என்று அவர் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
 
ரோபோடிக்ஸை தாண்டி, விண்வெளி வீரராக மாற வேண்டும் என்பதே தனது பெரிய கனவு என்று ஆதித்யா கூறுகிறார். 
 
Edited by Siva