வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 9 மார்ச் 2021 (16:10 IST)

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இனிமேல் இலவசம் !

சர்வதேச மகளிர் தினம் நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பெண்கள் இனிமேல் எந்தப் பகுதிக்கும் கட்டணம் இல்லாமல் பயணிக்காலம் என அந்த  மாநில அரசு அறிவித்துள்ளது.

உலகம்  முழுவதும் நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பஞ்சாப் மாநில முதல்வர் 8 புதிய திட்டங்களை அங்கு அமல்படுத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதில், பஞ்சாப் மாநிலப் பெண்கள் இனிமேல் அம்மாநிலத்தில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணம் செல்லாம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு பெண்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.