வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (18:39 IST)

பிறந்தநாள் கொண்டாட வராத நண்பர் நடுரோட்டில்கொலை !

ஆந்திரமாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காக்கி நாடா என்ற பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ்.

இவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் , அப்பகுதியிலுள்ள 9 வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார்.

நேற்று இரவு இவர் தன் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அவரது நண்பர் ஒருவர் தனது பிறந்தநாளுக்கு வீட்டிற்கு அழைப்பு விடுத்தார்.

ஆனால் ரமேஷ் இங்கே வருமாறு அவரை அழைக்க அவரும் வந்திருக்கிறார். பின்னர் தனது பிறந்தநாளைக் கொண்டாட ரமேஷ் மீண்டும் குடிபோதையில் அழைத்திருக்கிறார் அவரது நண்பர். ஆனால் அவர் மறுதலிக்கவே தனது காரில் ரிவர்சில் வந்து ரமேஷ் மீது கார் ஏற்றிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

அருகில் இருந்தவர்கள் ரமேஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றவர் ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறிவிட்டனர். போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.