சக மாணவர்களை காம்பஸ் கொண்டு 108 முறை குத்திய 4ஆம் வகுப்பு மாணவன்.. அதிர்ச்சி சம்பவம்..!

Written By Mahendran
Updated: திங்கள், 27 நவம்பர் 2023 (17:25 IST)
மத்திய பிரதேசம் மாநிலத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது மாணவன் மூன்று சக மாணவர்களை காம்பஸ் கொண்டு சரமாரியாக 108 முறை குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் என்ற பகுதியில் தனியார் பள்ளியில் நான்காம் படிக்கும் மாணவர் ஒருவர் திடீரென மூன்று சக மாணவர்களுடன் சண்டை போட்டதாக தெரிகிறது.

இந்த சண்டையின் போது ஆத்திரத்தில் சக மாணவர்கள் மூவரை காம்பஸ் கொண்டு 108 முறை மாணவன் சரமாரியாக குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு குழுமம் விசாரணை நடத்தி வருவதாகவும்  சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தேவையான கவுன்சிலிங் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மாணவனின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு அந்த மாணவன் மீது நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து அறிவுரை கூறப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

Edited by Mahendran

எல்லாம் காட்டு

வீட்டின் முன்பு மாந்திரீக பூஜை!.. ஜிபி முத்து மீது தாக்குதல்!...

நாளை வரை அவகாசம் கேட்ட பாஜக!.. தர்மேந்திர பிரதான் பதவி பறிக்கப்படுமா?...

லண்டன் ஓட்டலில் மர்மமாக உயிரிழந்த சவுதி இளவரசர்.. 8 மாதம் கழித்து வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்..

சினிமா பாத்து சீன் போடுறது இல்ல ஆட்சி!.. தவெகவை விளாசிய பிரேமலதா!..

நீட் வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை.. ரூ.10 கோடி அபராதம்: பிரதமர் மோடி

அடுத்த கட்டுரையில்
Show comments