1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2021 (08:35 IST)

உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீர் வெள்ளம்… மாயமான 150 பேர்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக தௌலிங்கா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு அதிகமானது. இதனால் கரையோரம் தங்கியிருந்தவர்களின் குடிசைகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இதனால் சுமார் 150 பேர் வரை மாயமாகியுள்ளனர். இதுவரை மூவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

தௌலிங்கா நதிக்கரை பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இந்திய ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.