1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2016 (20:16 IST)

’கொடுமை’ - மூன்று மகள்களை கிண்றில் வீசி கொன்ற தந்தை!

மஹாராஷ்டிர மாநிலம், பாலகன் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங் ஸ்ரீராம் கோடபெ. இவர் ஒரு விவசாய கூலி.

 

 
இவருக்கு இரண்டு மனைவி உள்ளனர். அவர்கள் மூலம் காயத்ரி (14), ஜெயா (10), கோமல் (5) என்ற மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், இவர் மிகவும் வறுமை நிலையில் இருந்துள்ளார். அதனால் அவர் குடும்ப செலவை சமாளிக்க, மூன்று ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவாசயம் செய்துள்ளார். அதற்காக அவர் 35 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதை அடுத்து அவருக்கு விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 
 
இதனால் இவரது இருமனைவியும் இவருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த இவர், புதன்கிழமை, தனது மூன்று குழந்தைகளையும் கிணற்றில் வீசிவிட்டு தானும் அதே கிண்றில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டார்.
 
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், இவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்ககாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக இருமனைவியையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.