1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 7 ஏப்ரல் 2018 (12:01 IST)

ஆந்திராவில் வெயில் கொடுமைக்கு ஒரே நாளில் 5 பேர் பலி

ஆந்திராவில் கடந்த சில நாட்களாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது, நேற்று மட்டும் வெயிலின் கொடுமையால் 5 பேர் பலியாகியுள்ளனர்.

 
 
இந்தியா முழுவதும் வெயில் கடுமையாக மக்களை வாட்டி வருகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையில் ஆந்திராவில் வெயில் அதிகமாக கொளுத்தி வருகிறது. 
 
இதனால் நேற்று ஆந்திராவைச் சேர்ந்த சின்னக்கா என்ற கூலித்தொழிலாளி வேலை செய்து கொண்டிருந்த போது வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழந்து உயிரிழந்தார்.
 
இதன் மூலம் நேற்று மட்டும் ஆந்திராவில் வெயிலின் கொடுமையால் 5 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயில் அதிகமாக இருக்கும் என கூறபடுவதால். மக்கள் அச்சத்தில் உள்ளனர்.