1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 3 மார்ச் 2021 (11:10 IST)

டெல்லி இடைத்தேர்தலில் மண்ணை கவ்விய பாஜக !!

டெல்லி மாநகராட்சியில் 5 வார்டுகளில் நடந்த இடைத்தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றிபெறவில்லை. 

 
டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு உட்பட்ட 5 வார்டுகளுக்கு கடந்த பிப்ரவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. 
 
ஆம், டெல்லி மாநகராட்சியில் 5 வார்டுகளுக்கான கவுன்சிலர் தேர்தலில் 4-ல் ஆம் ஆத்மி, ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. டெல்லி மாநகராட்சியில் 5 வார்டுகளில் நடந்த இடைத்தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.