1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : திங்கள், 1 ஜூலை 2024 (16:08 IST)

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சாலையில் அசால்ட்டாக எட்டடி முதலை ஒன்று வலம் வந்ததை பார்த்து வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது மழை பெய்து வரும் நிலையில் அந்த மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
 
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிப்லூன் என்ற பகுதியில் எட்டடி நீள முதலை ஒன்று உலா வந்தது. இந்த முதலை சாலையில் நடந்து சென்று கொண்டிருப்பதை பார்த்த அந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்
 
மேலும் ஒரு சிலர் அந்த முதலையை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். நேற்று இரவு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில், முதலையை  பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படும் முன் முதலையை படிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 
 
Edited by Mahendran